கொள்கை தளராத இயல்பு

 கொள்கை தளராத இயல்பு

பிரபல தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி 'உன்னைப்போல் ஒருவன்' நாவலை படமாக எடுக்க விரும்பி ஜெயகாந்தனிடம் ஸ்கிரிப் தயார் செய்ய சொல்லியிருக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜெயகாந்தன் ஸ்கிரிப்பை முழுவீச்சில் ரெடி செய்து கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அதை கேட்ட கிருஷ்ணமூர்த்தி, "இது கமர்ஷியலாக இல்லையே, வங்காள படம் போல இருக்கிறதே" என்று சொல்லியிருக்கிறார். உடனே கோபமடைந்த ஜெயகாந்தன், "ஸ்கிரிப்ட் என்பது ஒரு இயக்குனருக்கு வழிகாட்டி மட்டுமே. ஒரு திரைப்படம் எப்படி வரும் என்பது அதன் படைப்பாளியாலேயே முழுவதுமாக கணிக்க முடியாதபோது, முதலீடு செய்யும் உங்களை போன்ற வியாபாரிகளால் எப்படி முடிவு செய்ய முடியும்" என்று சொல்லி ஸ்கிரிப்டை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
கண்கலங்கிய காமராஜர்
பிறகு இதே படத்தை நிதிகளை திரட்டி தானே சொந்தமாக தயாரித்து ஜெயகாந்தன் வெளியிட்டார். பெருந்தலைவர் காமராஜர் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கியே போய்விட்டார். ஜெயகாந்தனிடம் "நம்முடைய கஷ்டங்களுக்கு காரணம் நமது ரசனை கெட்டுப்போனதுதான் என்றும், இந்த படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட வேண்டும்" என்றும் ஆதங்கப்பட்டு சொன்னார். அதன்பின்னர் உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. ஒருமுறை கண்ணதாசன் மேடையில் பேசும்போது, "நான் தினமும் உறங்கும்போது எனது தலையணைக்கு அடியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு உறங்குகிறேன். அது பைபிள் என்றோ, குர்-ஆன் என்றோ, கீதை என்றோ யூகிக்க வேண்டாம். ஜெயகாந்தன் எழுதிய 'யாருக்காக அழுதான்' என்ற நாவல்தான் அது" என்றார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்
May be an image of 1 person, beard, standing and outdoors
1

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,