முட்டாள்கள் தினத்தன்று நடைபெற்ற நல்ல விஷயங்கள்

 இந்த முட்டாள்கள் தினத்தன்று சில நல்ல விஷயங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் கூட உலகில் நடந்திருக்கிறது.



சிறை தண்டனை பெற்ற ஹிட்லர்
1924ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்று வெளிவந்துவிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி
கடந்த 1935 ஆண்டு ஏப்ரல் முதல் நாள் தான் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
நயா பைசா அறிமுகம்
ஏப்ரல் ஒன்று 1957 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புலிகள் காப்பகம்
கடந்த 1973 ஆண்டு ஏப்ரல் ஒன்னு அன்று தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கியது
ஆப்பிள் நிறுவனம்
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று தான் ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
ஈரான் நாடு
கடந்த 1979 ஆம் ஆண்டு இன்றைய தினத்தன்று தான், ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
வால்வெள்ளி
ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்ததும் கடந்த 1997 ஆண்டு இன்றை தினம் அன்று தான்.
ஒருபால் இனத்தவருடனான திருமணம்
கடந்த 2001 ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று, நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
கூகுள் மின்னஞ்சல்
2004 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, கூகுள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதை முதலில் உலக மக்கள் முட்டாள் தினத்திற்கான ஏற்பாடு என கருதினர். பின் இது உண்மையாகவே வெளியிடப்பட்டது



May be a cartoon


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,