4000 பேருக்கு வேலை.. அமெரிக்காவின் ஜேபி மோர்கன் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் குஷி..!

 


4000 பேருக்கு வேலை.. அமெரிக்காவின் ஜேபி மோர்கன் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் குஷி..!

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் இந்தியாவில் இருந்து தனது டெக் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்தியாவில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பல அலுவலகங்களை வைத்திருக்கும் ஜேபி மோர்கன் சுமார் 35,000 ஊழியர்களை டெக்னாலஜி மற்றும் ஆப்ரேஷன்ஸ் பணிகளுக்கான ஏற்கனவே பணியமர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜேபி மோர்கன்

ஜேபி மோர்கன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், வர்த்தகத்திற்கும் மிக முக்கியத் தேவையாக டெக்னாலஜி இருக்கும் காரணத்தால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும், புதிய தொழில்நுட்பத்தில் இயங்கவும் முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் அதிக வேலைவாய்ப்பு

இதற்காக ஜேபி மோர்கன் தற்போது கிளவுட், பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிஜிட்டல் தளம் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய பிரிவுகளில் அதிக ஊழியர்களையும், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள கூடுதலான 4000 ஊழியர்களில் பெரும் பகுதி பெங்களூர் டெக் சென்டரில் பணி அமர்த்தப்படுவார்கள் என ஜேபி மோர்கன் இந்தியா பிரிவின் ஹெச்ஆர் கவ்ரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,