டி. எம். சௌந்தரராஜன்

 


டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 241922 - மே 252013தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.

                         சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. . மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரிதேவகிசர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்

டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ் என்றால்,


செளந்தரராஜன்: `எம் என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!



·         டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

 

இவர் சிவாஜிஎம்.ஜி.ஆர்ஜெமினிஜெய்சங்கர்ரவிச்சந்திரன்முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவானசெம்மொழியான தமிழ்மொழியாம்என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்

1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார்அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடியமுத்தைத் திருபத்தித் திருநகைஎனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.

டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

 

பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு என்பார்!



·         கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்.`இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!



·         `நீராரும் கடலுடுத்த.. என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும்`ஜன கண மன என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

இவர் பாடிய சில பாடல்கள்

·         மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )

·         வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )

·         மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )

·         ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )

·         ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )

·         மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )

·         யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )

·         சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)

·         உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )

·         நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )

·         இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )

·         நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )

·         நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )

·         முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )↑

·         பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )

·         சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )

·         சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )

·         முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )

·         டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )

·         முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )

·         ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )

·         கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )

·         என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )

·         வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )

·         வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )

·         மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )

·         கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )

·         மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )

·         குயிலாக நான் ( செல்வமகள் )

·         மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )

·         ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )

·         பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )

·         மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )

·         முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )

·         கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )

·         ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )

·         எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )

·         திருடாதே பாப்பா ( திருடாதே )

·         காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )

·         தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )

·         ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )

·         ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )

·         மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )

·         கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )

·         அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )

·         அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )

·         அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )

·         பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )

·         நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )

·         அஹா மெல்ல நட ( புதிய பறவை )

·         அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )

·         யார் அந்த நிலவு ( சாந்தி )

·         சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )

·         பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )

·         என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )

·         உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )

·         சத்தியம் இது ( வேட்டைக்காரன் )

·         சத்தியமே ( நீலமலைத் திருடன் )

·         நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )

·         எங்கே நிம்மதி ( புதிய பறவை )

·         தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )

·         சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )

·         நண்டு ஊறுது ( பைரவி )

·         அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )

·         ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )

·         உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )

·         எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )

·         ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )

·         யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )

·         அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் )

·         மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )

·         ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )

·         உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )

·         அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )

·         அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )

·         ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )

·         முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )

·         மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )

·         நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )

·         மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )

·         கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )

·         அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )

·         நீயும் நானும் ( கெளரவம் )

·         தெய்வமே ( தெய்வ மகன் )

·         யாருக்காக ( வசந்த மாளிகை )

·         நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )

·         பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )

·         வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

 தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)


·         சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.


·         எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்

 

பெற்ற விருதுகள்

 

·         பத்மசிறீ-2003

·         கலைமாமணி விருது-1978

 தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)


·         சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.



·         எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்

 இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் சென்னையில் காலமானார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,