பழனிவேல் தியாகராஜன்
நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மெத்த படித்த கல்வியாளர் மட்டுமின்றி நிதித்துறை சார்ந்த விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்ட பழனிவேல் தியாகராஜன் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகுதியுள்ளோருக்கு பதவி
ஒரு சீனியர் தலைவருக்கு நிதித் துறை அமைச்சக பொறுப்பை கொடுத்தோம் என்று இல்லாமல், உரிய கல்வித்தகுதி மற்றும் அனுபவ தகுதி உள்ளவருக்கு ஸ்டாலின் இந்த பதவியை வழங்கியுள்ளார். தற்போது, தமிழ்நாட்டின் கடன் தொகை 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தவிர கொரோனா காரணமாக நிதி ஆதாரத்தை அதிகரிக்க முடியவில்லை.
கஜானாவை மீட்க வேண்டும்
தமிழக நிதி நிலைமை மிக மோசமான சூழ்நிலையில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், பழனிவேல் தியாகராஜன் தனது அனுபவத்தையும் பயன்படுத்தி இந்த இக்கட்டிலிருந்து தமிழக கஜானாவை மீட்டெடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையை அவர் மீது ஸ்டாலின் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்
Comments