மோடி, அமித் ஷாவை காணவில்லை

 மோடி, அமித் ஷாவை காணவில்லை: எம்பி ஜோதிமணி கடும் தாக்கு!


கெரோனா நோய்த் தொற்று சிகிச்சை விஷயத்தில் மத்திய அரசு பொது மக்களைக் காப்பாற்றாமல் கைகழுவி விட்டது எனக் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து கொரோனா பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மோடி, அமித் ஷாவை காணவில்லை: எம்பி ஜோதிமணி கடும் தாக்கு!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எம்பி ஜோதிமணி கூறியதாவது:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவிட் கேர் சென்டர் தேவை என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து அதற்கான பணிகள் தொடர்பாக வந்திருந்தேன்.
தடுப்பூசியைப் பொறுத்தவரைத் தமிழக முதல்வர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் மத்திய அரசு கொரனோ நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதிலிருந்து கைகழுவி விட்டது.
பிரதமரும், உள்துறை அமைச்சர் யாரையும் காணவில்லை என பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் மொத்த சுமையும் மாநில அரசு தலைகளில்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவிலாவது பணிகளைச் சரியாக மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அங்கும் மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்கின்றனர். அந்த அளவுக்கு இன்றைய சூழல் உள்ளது.
தமிழகத்தில் பொருத்தவரை ஜிஎஸ்டி வரவில்லை, வேக்சீனுக்கும் நாம் தான் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதில் பழைய அரசாங்கம் ரூபாய் 5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டுச் சென்றிருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் தாண்டி கொரோனா காலத்தில் எவ்வளவு வேகமாகச் செயல்பட வேண்டுமோ அந்த அளவு இன்று இந்த அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
May be an image of 1 person

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,