விழித்தெழட்டும் என் தேசம்

 விழித்தெழட்டும்

என் தேசம் 

*








எங்கே இதயம் 

அச்சமின்றி இருக்கிறதோ

தலை நிமிர்ந்து

நிற்கிறதோ


எங்கே அறிவு தளையேதுமின்றி சிறகடிக்கிறதோ


எங்கே உலகம் குறுகிய எண்ணங்களால் 

துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படாமல் இருக்கிறதோ


எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து 

சொற்கள் வெளிப்படுகிறதோ


எங்கே முயற்சிகள்  தளர்ச்சி இன்றி 

முழுமை நோக்கித்

தன் கரங்களை விரிக்கிறதோ


எங்கே

வழக்கொழிந்த பழக்கவழக்கங்கள் எனும் பாலைவனத்தால்  தெளிவான இலட்சிய நதி

வழிமறிக்கப்படவில்லையோ


எங்கே 

என்றும் நிலைத்திருக்கும் எண்ணங்களும் செயல்களும் இதயத்தை வழிநடத்துகிறதோ


அந்த விடுதலையின் விண்ணகத்தில்

என் தந்தையே  

விழித்தெழட்டும்

என் தேசம் .

*

#கீதாஞ்சலி

 - மகாகவி இரவீந்திரநாத் தாகூர்

*

மொழிபெயர்ப்பு: பிருந்தா சாரதி

*

குருதேவர் தாகூரின் 160 வது பிறந்த நாள்

மே7, 2021

*: பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,