குற்றங்கள்னு 2 வகை/. அடிப்படை சட்ட தகவல் பகுதி,
குற்றங்களை, Cognizable (புலன் கொள்ள கூடிய) மற்றும் Non-Cognizable (புலன் கொள்ள முடியாத) குற்றங்கள்னு 2 வகையா பிரிக்கலாம்.
---------
இதுல Cognizable குற்றங்கள் எல்லாமே பெயிலில் விட முடியாத (Non-Bailable), சமரசம் செய்ய முடியாததாக (Non-Conpoundable) இருக்கும்.
(எ.கா கொலை, கற்பழிப்பு)
இந்த Cognizable குற்றத்தை பொறுத்த வரைக்கும், Police முதல்ல FIR ரெஜிஸ்டர் பண்ணுவாங்க. அடுத்து விசாரணை பண்ணி, அந்த போலீஸ் ரிப்போர்ட்ட மாஜிஸ்திரேட்க்கு அனுப்புவாங்க.
Cognizable குற்றங்கள்ல, Warrent இல்லாமலயே குற்றவாளியை, போலீஸ் அரெஸ்ட் பண்ண முடியும்.
---------
Non- Cognizable குற்றங்கள், பெயிலில் விட கூடியதாக மற்றும் சமரசம் செய்ய முடியுறதாக இருக்கும்.
(எ.கா. அவதூறு வழக்கு)
Non - Cognizable குற்றங்கள்ல, போலீஸ் முதல்ல CSR பதிவு பண்ணுவாங்க. அடுத்து விசாரணை பண்ணி அந்த ரிப்போர்ட்ட மாஜிஸ்திரேட்'க்கு அனுப்புவாங்க. FIR பதிவு பண்ண வேண்டிய அளவுக்கு குற்றம் இருக்குமேயானால் மாஜிஸ்திரேட், FIR பதிவு பண்ண ஆர்டர் போடுவாங்க.
இங்க மாஜிஸ்திரேட் ஆர்டர் இல்லாம அரெஸ்ட் பண்ண முடியாது.
தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்
Comments