மெத்தி சிக்கன் குழம்பு

 மெத்தி சிக்கன் குழம்பு



ஒரு அட்டகாசமான சிக்கன் ரெசிபி.. அது தான் மெத்தி சிக்கன் குழம்பு. இந்த குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும். உங்களுக்கு மெத்தி சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?


கீழே மெத்தி சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது


தேவையான பொருட்கள்: * சிக்கன் - 3/4 கிலோ * வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)


மெத்தி இலைகள்/வெந்தய கீரை - 1 கப் * பச்சை மிளகாய் - 4 (கீறியது) * இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்


* கொத்தமல்லி - சிறிது * கறிவேப்பிலை - சிறிது * கெட்டியான தேங்காய் பால் - 1/3 கப் * எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் ஊற வைப்பதற்கு... * மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் * மல்லித் தூள் - 1 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் * தயிர் - 2 டீஸ்பூன் * உப்பு - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... * சீரகம் - 1/2 டீஸ்பூன் * சோம்பு - 1/4 டீஸ்பூன் * கிராம்பு - 2 * பட்டை - 1 இன்ச் துண்டு செய்முறை: * முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின் வெந்தய கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும். * பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும். * அதன் பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 7-8 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். * சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், மெத்தி சிக்கன் குழம்பு தயார். குறிப்பு: * நல்ல ப்ளேவர் கிடைக்க நற்பதமான வெந்தய கீரையைப் பயன்படுத்துங்கள். உலர்ந்த வெந்தய கீரையைப் பயன்படுத்த வேண்டாம். அது சுவை மற்றும ப்ளேவரை முற்றிலும் மாற்றிவிடும். * சிக்கனை இரவு தூங்கும் போதே மசாலாக்களை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். * இந்த குழம்பில் தக்காளி சேர்க்கவில்லை. அதற்கு மாறாகத் தான் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டுள்ளது. * தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டாம். மேலும் எலுமிச்சை சாற்றினை குழம்பை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும். * முக்கியமாக குழம்பை தயாரித்த பின், 2 மணிநேரம் கழித்து பரிமாறினால், மெத்தி சிக்கன் குழம்பு இன்னும் அற்புதமாக இருக்கும்.

Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/?story=1




Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/?story=1





Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/


Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/




Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/

Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/



Read more at: https://tamil.boldsky.com/recipes/methi-chicken-kuzhambu-recipe-in-tamil/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,