வாழ்க்கை என்பது ஒரு போர்களம்

 நீ ஏற்றுக்கொண்டாலும், இல்லை என்றாலும் வாழ்க்கை என்பது ஒரு போர்களம் தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், படிப்பாளியாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும் தினமும் போர் புரிந்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கைப் போரின் இறுதியில் மரணம் என்பது உறுதி. மரணம் வரை போராடுபவனுக்குத் தான் வெற்றி கிடைக்கும். நல்ல போர் வீரனுக்கு தினம், தினம் வெற்றிதான், இறுதியில் வெற்றி மீது வெற்றி பெற்று வீரமரணம் அடைவான். போரிடத் தயங்குபவன் தோல்வி மேல் தோல்வியுற்று அவமானப்பட்டு தலைகுனிந்து மரணத்தைத் தழுவுவான். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களின் பிணங்கள்தான் சரித்திரத்தில் குவிந்து கிடக்கின்றன. அதாவது போரிட தயங்கியவர்கள் வாழவே இல்லை!


ஒரு போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடிவு செய்த நீங்கள் ஒரு போர்வீரர் தான் என்பதில் ஐயமில்லை. வெற்றி தோல்வியை பற்றி வீரன் கவலைப்படமாட்டான். தோல்விகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் அவமானத்திலிருந்தும் அவன் நல்ல பாடம் பயில்வான். பின் நடக்கும் போரில் புது யுக்திகளைக் கையாண்டு வெற்றி அடைவான். தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருவதை அவன் ஒரு இயல்பான, இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையாகத்தான் கருதுவான்.
ஒரு போர்ப் படைத் தளபதியின் முதல் படைபலமே அவன்தான். போரில் தளபதியின் வீரம், விவேகம் மற்றும் போர் தந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி அமையும். ஒரு நல்ல தலைமை ஆசிரியர் அமைந்த பள்ளிக்கூடம் ஒரு நல்ல பல்கலைக்கழகம் போல் செழித்து வளரும். ஒரு நல்ல குடும்பத்தலைவன், போர்க்குணம் உள்ளவன் என்றால், அந்தக் குடும்பம் செழித்து வாழும்.
- சைலேந்திரபாபு ஐபிஎஸ்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,