நாட்டுச் சர்க்கரையில் இவ்வளவு நன்மைகள்

 

நாட்டுச் சர்க்கரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி வெள்ளை சர்க்கரை பக்கமே போக மாட்டீங்க..!





வெள்ளை சர்க்கரயை தினசரி பயன்பாட்டிற்கு தவிர்க்கச் சொல்கின்றனர். ஏனெனில் அதில் எந்தவித நன்மைகளும் இல்லை. அதோடு அதனால் கேடுகள்தான் பல...


வீட்டு வைத்தியம் அல்லது உடல்நலக் கோளாறுகளுக்கான வீட்டு மருந்து குறிப்புகளில் நாட்டுச் சர்க்கரையைத்தான் பலரும் பரிந்துரைப்பார்கள். வெள்ளை சர்க்கரயை தினசரி பயன்பாட்டிற்குக் கூட தவிர்க்கச் சொல்கின்றனர். ஏனெனில் அதில் எந்தவித நன்மைகளும் இல்லை. அதோடு அதனால் கேடுகள்தான் பல...எனவே இந்த நாட்டுச்சர்க்கரையை தினசரி பயன்படுத்தி வந்தால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
உடல் எடைக் குறையும் : வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது.
ஆஸ்துமா குறையும் : உங்களுக்கு ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்னைகள் இருப்பின் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது நல்லத். எனவே தினசரி டீ, காஃபிக்குக் கூட நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
கருப்பைக்கு நல்லது : நாட்டுச் சர்க்கரை கருப்பை தசைகளை தளர்வாக்கி வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. எனவே மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது.
வயிற்றுக்கோளாறுக்கு நல்லது : அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நாட்டுச்சர்க்கரை உதவும்
சோர்வை நீக்கும் : சிலர் எப்போதும் சுருசுருப்பு இல்லாமல் சோர்வாக இருப்பார்கள் அல்லது தொடர் வேலை களைப்பு இருந்தாலும் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சாப்பிட களைப்பு , சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்

சளி , இருமல் நீங்கும் : வீட்டில் ஓமம் இருந்தால் அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்துப்பாருங்கள். சளி , இருமல் சரியாகும்.
சருமத்திற்கு நல்லது : நாட்டுச் சர்க்கரையில் விட்டமின் பி இருப்பதால் சருமச் செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே ஸ்கிரப் அல்லது ஃபேஸ் பேக்குகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தை குழைத்து அதில் நாட்டுச்சர்க்கரை கலந்து முகத்தில் அப்ளை செய்தால் கூட போதும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,