காரா வடை
காரா வடை
:புழுங்கல் அரிசி-1/2 கப்
கடலை பருப்பு -3/4கப்
துவரம்பருப்பு கால் கப்
முழு உளுந்து கால் கப்
இஞ்சி பொடியாக நறுக்கியது சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
கருவேப்பிலை தேவைக்கேற்ப
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை: முதலில் அரிசி பருப்புகளை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் சிறிதளவு கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் பிறகு மிக்ஸியில் அரிசியையும் உளுந்தையும் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு பிறகு மீண்டும் இதர பருப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து காரத்திற்கு மிளகாய் பழம் 5 மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதிகமாக நீர் விடக் கூடாது இது மிகவும் முக்கியமான குறிப்பு. இப்பொழுது அரைத்த அரிசையையும், பருப்பையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
அத்துடன் கருவேப்பிலை இஞ்சி உறவைத்த கடலை கடலை பருப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து கலவையை கைகளில் எடுத்து அவ்வாறே கிள்ளினாற் போல்..... போடவும்.
நுரை அடங்கி சிறிது நேரம் வேக ஆரம்பித்தது திருப்பிப் போட்டு நன்கு வேக வைக்கவும். அடுப்பின் தனல் சிம்மில் வைத்து வேகவிடவும்.இப்பொழுது சுவையான ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி😋😋😋😋
-Mrs.G.லதா.சென்னை.
Comments