இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 100
இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 100
👉 மரணத்தை (death) அல்லது கொடுங்காயத்தை (grievois hurt) விளைவிக்க தாக்கும் போது,
👉 பாலியல் வன்புணர்ச்சி (rape) அல்லது இயற்கைக்கு மாறான காம இச்சையைத் (unnatural lust) திருப்தி செய்யும் எண்ணத்துடன் தாக்கும் போது,
👉 ஆட்கடத்தும் (kidnapping & abduction) எண்ணத்துடன் தாக்கும் போது,
👉 முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும் போது,
தற்காப்புக்காக, அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்க முடியும். தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படுகின்ற செயல் எதுவும், பிரிவு 100ன் படி குற்றமாகாது.
தற்காப்புரிமை என்பது தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமையே தவிர, பழிவாங்குவதற்காகவோ அல்லது தண்டிப்பதற்காகவோ அளிக்கப்பட்டுள்ள உரிமையாகாது.
Comments