குழந்தை நவீராவின் ஓவியங்கள்
இன்றைய குழந்தைகள் கையில் பேனாவை பிடிக்கிறார்களோ இல்லையோ வரைவதற்கு பிரஸை எடுத்து விடுகிறார்கள். ஆயக்கலை 64 -ல் ஓவியமும் ஒரு கலை.அதாவது Art என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.
குழந்தைகள் தான் இன்று பெரியவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அந்தவகையில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தையான நவீரா ஓவியத்தில் சிறந்து விளங்குகிறார்.
நவீரா வின் ஆர்வத்தை புரிந்து அவரின் தாயார் ஊக்கப்படுத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது மற்றும் எவற்றில் அதிகம் ஆர்வத்துடன் செயல்படுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறார்கள்.
நவீரா மற்றும் அவரின் தாயார் குழந்தைகள், பெற்றோர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள்.
குழந்தைகளின் உலகில் நாம் அனைவரும் ஒரு பறவையாய் பறக்க வேண்டும்.ஏனென்றால் அப்போது தான் அவர்களும் வழியை உருவாக்கிக் கொண்டே நகர்வார்கள்.
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments