முள்ளங்கி ஏன் சாப்பிடணும் ?

 முள்ளங்கி ஏன் சாப்பிடணும் ?








 குளிர்கால காய்கறிகளில் இந்தியாவில் முள்ளங்கி முக்கியமானது. 


இது நீர்ச்சத்து நிறைந்த நன்றாக சாப்பிட கூடிய வேர் காய்கறியாகும்.


 முள்ளங்கி சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது.


மேலும் முள்ளங்கியின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகள் என தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகின்றன.


 முள்ளங்கியில் ஏராளமான எண்ணெய் கலவைகள் உள்ளன.


 முள்ளங்கியை சமைத்தோ, பச்சையாகவோ அல்லது ஊறுகாயாக . துவையலாக செய்தும் சாப்பிடலாம்.


இந்த முள்ளங்கி ஏன் குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.


 தெரிந்துகொள்வோமா?


முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரசாயன கலவைகள் உள்ளன.


 எனவே முள்ளங்கியை சாப்பிடுவதால் உங்கள் உடலின் இயற்கையான அடிபோனெக்டிக் (புரத ஹார்மோன்) உற்பத்தியையும் இது மேம்படுத்துகிறது.



மேலும் முள்ளங்கியில் நீரிழிவு உருவாவதை தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற ஆற்றலும் உள்ளது. அதனால் முள்ளங்கியை தவிர்க்காமல் அதிகமாகவே பயன்படுத்துங்கள்.


உடலில் கல்லீரல் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு.உடலில் நோய்த்தொற்று ஏற்படும் போது தானாகவே அதை சரிசெய்து கொள்ளும் குணம் இந்த கல்லீரலுக்கு உண்டு.


 முள்ளங்கியில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுக்காக்கும் கலவைகள் உள்ளன.


 மேலும் இந்த கலவைகள் சிறுநீரகங்களில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன.


முள்ளங்கியில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. 


இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. 


மேலும் முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் நைட்ரேட்களை அதிகமாக கொண்டுள்ளன.


முள்ளங்கியில் அதிக அளவு குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன. 


அவை கந்தக கலவைகள் ஆகும்.


 இவை புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுக்காக்கும். 


மேலும் புற்றுநோய் கட்டி உருவாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் திறனை இவை கொண்டுள்ளன.


 இதனால் இது புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் அற்புதமான மருந்தாக பார்க்கப்படுகிறது.


முள்ளங்கி இயற்கையாகவே பூஞ்சை காளான் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது. 


இது பொதுவாக பூஞ்சை தொற்றுநோய்களின் உயிரணு இறப்பிற்கு உதவும் ஒரு பூஞ்சை காளான் புரதத்தை கொண்டுள்ளது. 


இதை கொண்டே இவை பூஞ்சை காளான்களை எதிர்க்கின்றன.


முள்ளங்கி சாறானது வீக்கத்தை குறைக்கவும் சிறுநீர் பாதையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சிறுநீர் வரும்போது எரியும் உணர்வு போன்றவற்றை குறைக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.


 சிறுநீரக அமைப்பில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் இது உதவுகிறது. 


முள்ளங்கியை சாம்பாராக மட்டும் வைக்காமல் வெள்ளை வினிகர், பூண்டு, கிராம்பு, கருப்பு மிளகுத்தூள், பெருஞ்சீரகம் விதைகள், கொத்தமல்லி விதைகள், மிளகாய் மற்றும் கடுகு போன்றவற்றை பயன்படுத்தி முள்ளங்கி ஊறுகாய் தயாரிக்கலாம்.


புதிதாக செய்யும் சாலட்டில் வெட்டப்பட்ட அல்லது துருவிய முள்ளங்கியை சேர்க்கலாம்.


ஒரு பர்கரில் வெட்டப்பட்ட முள்ளங்கி மற்றும் கீரையை சேர்க்கலாம்.


காய்கறிகள் உள்ள தட்டில் கொஞ்சம் முள்ளங்கியை சேர்த்து உண்ணலாம்.


முள்ளங்கி சிறிது பூண்டு மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்து உண்ணலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,