அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள்/கவிதாஞ்சலி

 அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று( 27.7.2021)






 இந்தியாவின் முதல் குடிமகனாய் வாழ்ந்து, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும்,தன து எளிமையால், அறிவார்ந்த சிந்தனையால் கவர்ந்தவர், டாக்டர் ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு 


 கவிதாஞ்சலி



 இராமேஸ்வரம் மணலிலே பதித்த  பாதங்கள்


 இயல்பாய் ஏழ்மையில் இளமைக் காலங்கள்


 படிப்பிலும் துடிப்புடன் எதிர்கொண்ட போராட்டம்


 பக்குவத்திற்கு கிடைத்த பலன்தான் பாராட்டும்


 நாடு முன்னேற வேண்டுமென்று மனதுக்குள்ளே குறிக்கோள்


 நாமெல்லாம் உழைத்தாலே பெறலாம் அவ்வளவுகோல்


 இளைஞர்களே சிந்தியுங்கள் விடியல் உங்கள் கையில்


 இந்தியா வல்லரசாய் உருவாகும் நம்பிக்கையில்



 அக்னிச் சிறகுகள் உணர்த்துவதெல்லாம் ஓயாத உழைப்பை 


 அனைவரும் அறியணும் கலாம் ஐயாவின் தன்முனைப்பை


 பெரும் பதவி பெற்றாலும் வாழ்ந்ததெல்லாம் எளிமையே


 பேராசிரியரின் பேச்சாற்றல் கவர்ந்ததெல்லாம் நம்மையே


 வாழ்ந்த காலம் முழுவதும் அறிவார்ந்த சிந்தனை


 இவ் வையகம் போற்றும் விஞ்ஞானி யின் தனித்தன்மையினை


 உயர்ந்த உள்ளம் உறங்குது இம்மண்ணிலே


 உலகறியும்......நாம் பயணிப்போம் அப்துல்கலாம் வழியிலே.......



முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,