ட்ரோன்கள் மூலம்.. . சென்னை மாநகராட்சி சூப்பர் முயற்சி..
ட்ரோன்கள் மூலம்.. . சென்னை மாநகராட்சி சூப்பர் முயற்சி.. பாராட்டும் மக்கள்
கொசு இல்லாத சென்னை
சென்னையில் எவ்வளவு பெரிய அழகிய கட்டிடங்கள் வந்தாலும் பக்கத்திலேயே ஓடும் கூவமும், அடையாறும் அதன் அழகை அப்படியே கெடுத்துவிடும்.
காரணம் சாக்கடைகள் சங்கமிக்கும் இடமாக இந்த இரண்டு நதிகளும் உள்ளன. மலைக்காலங்களில் வெள்ள நீர் வடிகால்களாகவும், சாக்கடைகள் எடுத்து சென்று கடலில் கலந்துவிடும் இடமாகவும் இந்த கால்வாய்கள் மாறி உள்ளன
காரணம் சாக்கடைகள் சங்கமிக்கும் இடமாக இந்த இரண்டு நதிகளும் உள்ளன. மலைக்காலங்களில் வெள்ள நீர் வடிகால்களாகவும், சாக்கடைகள் எடுத்து சென்று கடலில் கலந்துவிடும் இடமாகவும் இந்த கால்வாய்கள் மாறி உள்ளன
கொசு மருந்து இந்நிலையில் கொசு உற்பத்தியாவதை தடுக்க புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளது. எப்படி என்றால் சென்னையில் நீர் வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளனர். மாநகராட்சியின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்
கொசு இல்லாத சென்னை இதனால் என்ன ஆகிறது என்றால் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு, தேங்கி கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி ட்ரோன்களை கொண்டு கொசு மருந்தை, இந்த கால்வாய் முழுவதும் அடிக்கப்படுகிறது. கொசு இல்லாத மாநகராட்சியாக இருக்க இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவிற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments