மழைக்காலத்தில் என்ன சாப்பிடணும்.

  மழைக்காலத்தில் என்ன சாப்பிடணும்... என்ன சாப்பிடக் கூடாது... 









பொதுவாக பருவ மழை காலத்தில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் அதிகமான நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது பருவ மழை காலத்தில் சளி மற்றும் சரும தொல்லைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கால கட்டத்தில் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே மாதிரி சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம்.


​நோய் பரவும் காலம்


ஏற்கனவே கோவிட் 19 போன்ற தொற்று நோய்கள் ஒரு பக்கம் மேலும் மழைக்காலத்தில் வரும் காய்ச்சல், இருமல் மற்றும் கொசு மூலம் பரவும் நோய்கள் என ஏராளமான தொற்றுக்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறனை மழைக்காலங்களில் வழங்குகிறது.


அந்த வகையில் பார்க்கும் போது இந்த மழைக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்.


​மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்


தவிர்க்க வேண்டியவை : மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் வெளியில் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வெளியே சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது.


​குறைக்க வேண்டிய உணவுகள்


இறைச்சி, முட்டை மற்றும் மீனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஏனெனில் பொதுவாக இந்த ஷரவான் மாதத்தில் மக்கள் இறைச்சி உணவுகளை சாப்பிடுவதில்லை. மேலும் மழைக்காலத்தில் இறைச்சி உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.


​சேர்க்க வேண்டிய உணவுகள் :


இறைச்சியுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடுவதை விட மற்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைக்கீரை விதைகள், வாழைப்பழ மாவு போன்றவற்றை இந்த மழைக்காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சில வகை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கு இலை வடை, புளிச்ச கீரை போன்றவற்றை அதிகமாக எடுத்துரைக்க பரிந்துரைக்கிறார்.


இமாச்சலப் பிரதேச மக்களின் வேகவைத்த உணவுகளான சித்து, மோதகம் மற்றும் பாஃப்லா போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது மழைக்காலத்தில் உங்க உடம்பு சூட்டை அதிகரிக்க உதவி செய்யும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். எனவே பருவ மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை சேர்ப்பது நோய்களை விரட்டியடிக்க முடியும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,