இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

 இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்! 




நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் மிகவும் பிஸியாக இருக்கிறோம். பொதுவாக, சரியான உடற்பயிற்சிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. இது நம் ஆரோக்கியத்தை நேரடியாகவே பாதிக்கிறது. நீங்கள் இதை தொடர்புபடுத்த முடிந்தால், பின்வரும் விஷயங்களை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.


நீங்கள் தொடர்ந்து ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தபடியே சில உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம். அல்லது இரவு உணவிற்குப் பிறகு நிதானமான நடைப்பயிற்சி செய்யலாம். இரவு உணவிற்குப் பிறகான நடைபயிற்சி, படுக்கை நேரத்திற்கும் இரவு உணவிற்கும் இடையிலான நேர இடைவெளியை அதிகரிக்கிறது; இது மிகவும் அவசியம். இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதன் அதிக ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.


செரிமானத்தை மேம்படுத்தும்:


இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி உங்கள் உடலை அதிக கேஸ்ட்ரிக் என்ஸைம்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கம், மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும், வயிறு தொடர்பான வேறு எந்த பிரச்சனையிலிருந்தும் தளர்வு அளிக்கிறது.


வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்:


மெட்டபாலிசத்தை அதிகரிக்க எளிதான வழிகளில் ஒன்று, இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக படுத்துக்கொள்வதற்குப் பதிலாக நடைப்பயிற்சி செல்வது. இது நீங்கள் உறங்கும்போது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலை நல்ல நிலையில் வைத்திருக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


இரவு உணவிற்கு பிறகான நடைபயிற்சி, உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதனால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். இதனையடுத்து, உங்கள் உள் உறுப்புகள் சிறப்பாக வேலை செய்யும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு நோய் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது, இதில் கொரோனா போன்ற கடுமையான நோய்களும் அடங்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,