நீ வாசித்து விட்டு போ

 

நீ வாசித்து விட்டு போ

                                                                               -கவிதை

நான் எப்போதும்

கனவுகளின் வழியே

உன் ஞாபகங்களை சேகரிக்கிறேன்

எதற்காக உன் குரல்

எனக்குள் ஒலித்துக்கொண்டே

இருக்க வேண்டும்.. 

எதற்காக உனது பிம்பங்கள்

கண்முன்னே காட்சிகளாக

தோன்றுதல் வேண்டும்.. 

இந்த விளையாட்டின் விதிதான் என்ன...

உன் அருகாமை என்பது

என் காத்திருப்பு

எனது கவிதைக்கான

திறவுகோல் 

அப்படியே நான் எழுதிக்கொண்டேயிருக்கிறேன்

நீ வாசித்து விட்டு போ



... 


சகுந்தலா ஸ்ரீனிவாசன்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்