ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டாமாடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா,
வடிகட்டிய முட்டாள்தனம்.. இல்லாத கொழுந்தியாள் பற்றி செய்தியா?.. கொதித்து போன பிடிஆர்.. ஆவேசம்!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட்டரில் வதந்திகளை பரப்பிய கும்பல்களுக்கு எதிராக கடுமையான ட்வீட்களையும் பிடிஆர் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அழைப்பு சென்று இருந்த நிலையில், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, அதோடு எதை பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்தார்.பிடிஆர் விளக்கம் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தெரிவிக்கிறார்கள். நான் ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளுக்கு வருவதாக நேரம் ஒதுக்கிட்டேன். அதனால் என்னால் செல்ல இயலவில்லை என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் இந்த செய்தியை இணையத்தில் பலர் தவறாக திரித்து ட்வீட் செய்து வந்தனர். நியூஸ் பிரேக்கிங் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர். அதன்படி பிடிஆர் பழனிவேல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று வதந்தி பபரப்பப்பட்டது.
அதோடு கொழுந்தியாள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டது. இதெல்லாம் போக இன்னொரு நபர் ஒரு படி மேலே போய்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. லக்னோ செல்ல வேண்டும் என்றால் மூன்று விமானம் மாறி செல்ல வேண்டும். இதை விரும்பாத நிலையில் முதல்வரிடம் அவர் ஸ்பெஷல் விமானம் கேட்டார். ஸ்பெஷல் விமானம் கிடைக்காமல் ஈகோ காரணத்தால் பிடிஆர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டது.
இன்னொரு ட்வீட்டில், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்று கடுமையாக கடிந்து கொண்டு இருக்கிறார்.
news courtesy:https://tamil.oneindia.com/
No comments:
Post a Comment