ஒற்றை தலைவலிக்கு இதை செய்து பாருங்கள்

 ஒற்றை தலைவலிக்கு இதை செய்து பாருங்கள்.! மலச்சிக்கலுக்கு குட் பை சொல்லுங்க.! 



💚❤️


மலச்சிக்கல், ஒற்றை தலைவலிக்கு முத்திரை மூலம் தேர்வு காண முடியும். அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.


கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.


மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.


இப்போது உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.


இதனை நீங்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.


வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.


இப்படி நீங்கள் செய்யும் போது மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.


தொடர்ந்து இந்த முத்திரையை ஒரு மாதம் செய்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாகும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும்.


மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,