வி.சா.காண்டேகர்

 வி.சா.காண்டேகர் காலமான தினமின்று!








😢
‘கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக’ – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் இந்த- வி.சா.காண்டேகர்!
கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர்! “இலக்கியம் என்பது மனிதத் தன்மையின் மேன்மையை உயர்த்த வேண்டும்; சமூகத்தில் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் அடிமையாகக் கிடக்கும் அடித்தட்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவே, எழுத்தாளர்களின் கடமை”- என்று அறிவித்தவர்.
வாழ்க்கையில், ‘தொண்டு’ ‘அன்பு’ முதலியவற்றைத் தமது நியதியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். சமூகத்திலுள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், கொடுமைகளைப் போக்கிடவும், நீதி கிடைக்கவும், சமூகம் முன்னேற்றமடைந்திடவும் தனது எழுதுகோலைச் சுழற்றியவர் வி.சா. காண்டேகர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,