உமாசங்கர் கவிதைகள்
பனைமரம்*
தற்சார்பு கொண்ட தமிழ் தனைச் சார்ந்து
வளர்ந்ததால், தன்னுடைய 'கருக்கு' வாள்
கொண்டு தமிழ்ப்பகை முடித்த
கர்வம் கொண்டு,
சூரியக் குழம்பின் வண்ணம் குழைத்து,
மேகப்பஞ்சில் தீட்டும் எத்தனத்துடன்
தூரிகையாய் வான் நோக்கி வளர்கிறது,
பனைமரம்!
_____________________________________________________
இரவு சேலை
மயங்கும் மாலைப் பொழுதில்,
மலையும் கதிரும் உரசிக் கொண்டதால்
உருவான வெப்பத் தீப்பொறிகள் பட்டு
, பஞ்சு மேகங்கள் தீப்பற்றிக் கொள்ள
, கனன்று எழுந்த கரும்புகையினின்றும்
நூலெடுத்து,
தனக்கான இரவுச்சேலையை
நெய்து கொள்ள ஆயத்தமாகிறது
அந்தி வானம்
-உமாசங்கர்
Comments