உமாசங்கர் கவிதைகள்

 

பனைமரம்* 




 தற்சார்பு கொண்ட தமிழ் தனைச் சார்ந்து

 வளர்ந்ததால், தன்னுடைய 'கருக்கு' வாள்

 கொண்டு தமிழ்ப்பகை முடித்த 

கர்வம் கொண்டு, 

சூரியக் குழம்பின் வண்ணம் குழைத்து, 

மேகப்பஞ்சில் தீட்டும் எத்தனத்துடன்

 தூரிகையாய் வான் நோக்கி வளர்கிறது, 

பனைமரம்!

_____________________________________________________



இரவு சேலை

மயங்கும் மாலைப் பொழுதில்,

மலையும் கதிரும் உரசிக் கொண்டதால்

உருவான வெப்பத் தீப்பொறிகள் பட்டு

, பஞ்சு மேகங்கள் தீப்பற்றிக் கொள்ள

, கனன்று எழுந்த கரும்புகையினின்றும்

 நூலெடுத்து,

 தனக்கான இரவுச்சேலையை

 நெய்து கொள்ள ஆயத்தமாகிறது

 அந்தி வானம்



-உமாசங்கர்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்