கதை திருடிய அரிசில் மூர்த்தியை அழைத்து திட்டிய சூர்யா

 இந்திய சினிமாவில் புதியதொரு முன்உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.



நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட். கடைக்குட்டி சிங்கம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சின்ன பட்ஜெட் படங்களையும் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சமீபத்தில் இவர்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவித்தனர். முதல் படமாக இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் வெளியானது. அரிசில் மூர்த்தி என்பவர் படத்தை எழுதி இயக்கியிருந்தார். படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும், படமாக்கியவிதத்தில் இருந்த அமெச்சூர்த்தனத்தல் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அத்துடன் படம் கதைத் திருட்டு சர்ச்சையிலும் சிக்கியது.

இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே, தான் தயாரித்த படத்தின் கதை மராத்திய படத்திலிருந்து திருடப்பட்டது என்பது சூர்யாவுக்கும், பிறருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் சூர்யா.

தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதில் சூர்யா மிகவும் கவனமாக இருக்கிறார். தங்கள் படத்தில் பணிபுரிகிறவர்கள் யாருக்கும் பணமாக அவர்கள் தருவதில்லை. பேட்டா உள்பட அனைத்தும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சென்னையிலிருந்து நீங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு செல்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்யும் செலவுக்கான பில்லை தந்தால் அவை பத்து தினங்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இன்றைய தேதியில் தமிழில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் கச்சிதமாக செயல்படும் ஒன்றிரண்டு நிறுவனங்களில் 2டி என்டர்டெயின்மெண்ட் முதன்மையானது. அவர்களின் ஒரு படம் திருட்டுக் கதை என்றால் எப்படியிருக்கும்?

சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து திட்டியதுடன், கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன் நிற்கவில்லை. மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார். ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன்வந்து நஷ்டஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.

சூர்யா தானொரு ஜென்டில்மேன் தயாரிப்பாளர் என்பதை மறுபடி நீரூபித்துள்ளார்.


நல்ல வேளை நான் தப்பித்தேன் ,இந்த  படத்தை விமர்சனம் செய்ய நினைத்திருந்தேன்
--உமாதமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,