கார்காலம்/உமாசங்கர் கவிதைகள்

 கார்காலம்





செவ்வான சிவப்பெடுத்து

செங்காந்தள் பூத்திருக்க,

பாறை மீது புதுத்தண்ணீர்

கும்மாளம் போட்டிருக்க

ஜடைபின்னி சதிராடும்

ஆலமர விழுதுக்கு

மேகம் வந்து பூ வைக்க

மயிலாடும் நாட்டியத்தை

மான் கூட்டம் மகிழ்ந்து நோக்க

மழைத்தண்ணீர் குடித்த தவளை

தொண்டை கட்டி கமறிக்கத்த

கதிரவனை காணாமல்

கொண்டைசேவல் குழம்பி நிற்க

கார்கால கருங்குழலி

கதிர்மறைத்து நகைக்கின்றாள்!

--உமாசங்கர்




Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்