தனிமை.../கவிதை /அனிதா சந்திரசேகர்


தனிமை..



 ஒரு தனிமை...

உனக்கும் எனக்குமான தூரத்தை

மௌனத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறது...


ஒரு தனிமை...

அனிச்சையாய் நுழையும் உன் தீரா நினைவுகளால்

உலகை மறந்த நிலையில் உவகை கொண்டிருந்தது...


ஒரு தனிமை...

ஏதோ பிரம்மை கவ்விக் கொள்ள

மழை ஒய்ந்த மௌனத்தில் சொட்டும் துளிகளாய் தனித்து புலம்புகிறது ...


ஒரு தனிமை...

நினைவுகள் நிரம்பி வழியும் உயிர்ப் பேழையிலிருந்து காற்றாய் மிதந்து வந்து நீ மட்டுமே என் வாழ்தலின் தேவையாய் என்னை இயங்க வைக்கிறது...


ஒரு தனிமை...

சில நியாபக இழைகள் 

மனச்சுவரில் முட்டிமோதி

தொலைதலும் மீளுதலுமாய் நீளும் நிசப்தம் பனிப்பாறையாய் இறுகிக் கிடக்கிறது...


காலத்தால் சபிக்கப்பட்ட நீயற்ற இந்த வெறுமை நிறைந்த தனிமை என்னை மிடறு மிடறாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது நாளும் பொழுதும் ....


- அனிதா சந்திரசேகர்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்