தங்கமகன் போனபின்னர் தமிழுக்கும் கதியிலையே

 கண்ணதாசனுடன் அண்ணன் என்று அன்புடன் நெருங்கிப் பழகிய பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் இளம் வயதில் இறந்துவிடுகிறார். கவியரசருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவருடன் பழகியதை நினைத்துப் பார்க்கிறார். பட்டுக்கோட்டையாரின் உருவம் கண்முன்னே வந்து நிற்கிறது.
















‘வெற்றிலையும் வாயும் விளையாடும் வேளையிலே
நெற்றியிலே சிந்தை நிழலோடி நின்றிருக்கும்
கற்றதமிழ் விழியில் கவியாக வந்திருக்கும்
அண்ணே என உரைத்தால் அதிலோர் சுவையிருக்கும்!’’
‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே
வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்துவரும் நின்பெயரே!’’
என்று பாடுகின்றார்.
கிராமப் புறங்களிலே ஒப்பாரி வைத்தழும் தாய்மார்கள் இறந்தவரின் பெருமைகளை எண்ணி எண்ணிப் பாடுவார்கள். கேட்போரின் நெஞ்சம் இளகி விடும். தன்னையறியாமலேயே கண்ணீர் ஓடி வரும். கவிஞரின் இந்தப் பாடலும் பட்டுக்கோட்டையாரின் வெற்றிலை போடும் பழக்கத்தையும் தம்மை அண்ணே என அழைப்பதையும் நினைவூட்டுகின்றன.
போன உயிர் மீண்டும் வருவதில்லை. தன் உயிரைக் கொடுத்தாலாவது அவர் பிழைப்பார் என்றால் அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார் கவிஞர்.
‘‘தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?’’
எங்கினிமேல் காண்போம்? எவர் இனிமேல் புன்னகைப்பார்?
தங்கமகன் போனபின்னர் தமிழுக்கும் கதியிலையே!’’
என்று கண்ணதாசன் கவிதையில் கதறி அழுகின்றார். எளிய சொற்கள் தாம். எல்லார்க்கும் தெரிந்தவைதாம். எனினும் கவிஞரின் கைவண்ணத்தில் அச்சொற்கள் அழகான கவிதையாக உருவெடுக்கின்றன.
நன்றி:புது திண்ணை.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,