ஜெமினி கணேசன்’ 101

 காலத்தால் அழிக்க முடியாத காதல் மன்னன் ‘ஜெமினி கணேசன்’ நூற்றி ஒன்றாவது பிறந்த நாளின்று




💐
இப்போ யார், யாரையெல்லாமோ ப்ளே பாய், சாக்லேட் பாய், ஹேண்ட்ஸம் லுக் அப்படீன்னு அடைமொழி போட்டு கூப்பிடறாங்களே அதுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ரொமான்ஸ் பர்சனுக்கான வார்த்தை காதல் மன்னன் என்பது.இப்பத்திய ஜெனரேஷன்களுக்கு தெரிஞ்ச அரவிந்த்சாமி, அஜித், அப்பாஸ், மாதவன் போன்றோர் பெண்களின் சாக்லேட் பாய்ஸ் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தவர் காதல்மன்னன் ஜெமினி கணேசன் என்றால் மிகையல்ல. ஆனாலும் ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி. ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவருக்கு ஹாப்பி பர்த் டே!



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,