உலக கருணை தினம்"




நவம்பர் 13-ம் தேதியன்று கருணை நாளாக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.

வயதான நபர் சாலையை கடக்க உதவி செய்தல், குழந்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் இரக்கம் முக்கிய பங்காகும்.


இந்த "உலக கருணை தினம்" நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே செய்கிறது. நாம் அன்புடன் ஒருவரை அணுக அதே அன்பு நம்க்கும் திரும்பக் கிடைக்கிறது. இதனால் நம் மனம் மகிழ்ச்சியடைகிறது. மனம் மகிழ்ச்சியடைய, உடலும் நோயில்லாமல் வளர, " வாழ்க வளமுடன்"என்பதற்கொப்ப நம் வாழ்க்கையும் அமைகிறது.


உலக மஹான்கள் பலரும் மதங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அன்பையும் கருணையும் முக்கியமாகக் கருதி போதித்தார்கள் .எனவே நாம் சில மனிதாபிமான வேலை செய்ய வேண்டும் என்றும் நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்கள் சிந்திக்க வேண்டும்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,