அருந்ததி ராய்







✍ இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.


✍ இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை குறிப்பிட்டுள்ளன.


✍ மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.


✍ இவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.


✍ 1997ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்-க்கு புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார். 2004ல் சிட்னி அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி