மதுரை சோமு

 மதுரை சோமு நினைவுநாள் இன்று.




ராகத்தோடு ஒன்றிப் பாடக் கூடியவர் சோமு. சமயத்தில் பாடிக் கொண்டிருக்கும் போதே முன்னோடிப் பாடகர்களை நினைத்து கண்கலங்குவார். குரல் தழுதழுப்பார். அழுதும் விடுவார். அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார். 'என்னகவி பாடினாலும்' போன்ற பாடல்களைப் பாடும்போது தன்னையறியாமல் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடுவது அவர் வழக்கம். குறிப்பாக முருகன் பாடல்களைப் பாடும்போது பக்திக் கண்ணீர் விடுவார். சபையோரையும் பக்தி மேலிட்டு அழச்செய்து விடுவார். இசையுலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் ஜாம்பவானாகக் கோலோச்சிய சோமு, புகழின் உச்சியில் இருந்தபோதும் கூட தலைக்கனம் ஏதுமில்லாமல் சாதாரண ரசிகர்களை மதித்து அவர்களுடன் தோழமையோடு பழகியவர். அவர்களது ரசனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுபவர். “மாரியம்மன் கோயில் திருவிழாவிலே போய்ப் பாடுறோம். அங்கே முன்வரிசை முழுவதும் பெரிசா குங்குமம் இட்டுட்டுப் பெண்கள் உட்கார்ந்திருக்காங்க. அங்கே போய் நமது மேதா விலாசத்தைக் காட்டப் பெரிய பெரிய கீர்த்தனைகளை மூணு மணி நேரமும் பாடிக்கிட்டிருந்தா அவங்க ரசிப்பாங்களா?” என்கிறார் பேட்டி ஒன்றில்.
நன்றி: தென்றல்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,