ஆலங்குடி சோமு

 ஆலங்குடி சோமு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932, டிச., 12ல் பிறந்தார். திரையுலகில் இவரை, பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர், அவரின் நண்பர் புரட்சிதாசன். சின்னப்ப தேவரின், யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்...' என்ற நகைச்சுவை பாடல் தான், அவர் எழுதிய முதல் பாடல்.



'இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்; மலருக்குத் தென்றல் பகையானால்; துள்ளுவதோ இளமை, தேடுவதோ தனிமை...' உள்ளிட்ட, ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில், 1960 முதல், 1990 வரை, 35 ஆண்டுகளில், 80 படங்களுக்கு, 170 பாடல்கள் எழுதியுள்ளார்.
கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும், சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973- - 74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. 1990, ஜூன்,6ல் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என, பன்முகம் உடைய, ஆலங்குடி சோமு பிறந்த தினம் இன்று!
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,