கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவுநாள்

 கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவுநாள் இன்று.




தமிழ்க் 'காதலராய்' வாழ்வைத் தொடங்கி தமிழ்க் 'காவலராய்' வாழ்வை நிறைவு செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இயல், இசை நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்வாங்கி; பேசியும் எழுதியும் இயங்கியும் காத்து நின்றதால் அவரைச் சரியாகவே 'முத்தமிழ் காவலர்' என்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் 1957-ல் விருது தந்து பாராட்டியது. இதை உணர்ந்தே
“பேச்சு பவளம்; பெருந்தொண்டு நல்முத்து
மூச்செல்லாம் தூயதமிழ்...”
என்று கவிஞர் சுரதா தங்க வார்த்தைகளால் கவி சொன்னார்.
1997-ல் திருச்சியில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரி, அவர் பெயராலேயே 'கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி' என்று முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பெயர் எவ்வளவு பொருத்தம் என்பதை வரலாறு சொன்னது.
சமஸ்கிருதம் தெரிந்தால்மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும் என்ற விதி இருந்த காலமுண்டு. ஒடுக்கப்பட்ட எளிய சாதி மக்களால் மருத்துவப் படிப்பில் இதனால் சேரமுடியவில்லை. நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராகவிருந்த கி.ஆ.பெ.வி இந்த பிரச்னையை அன்றைய முதல்வர் பனகல் அரசரிடம் கொண்டுசென்றார். அதன் பிறகே 'சமஸ்கிருதம் தேவை' என்ற விதி நீதிக்கட்சியால் நீக்கப்பட்டது. எளிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய காரணமான கி.ஆ.பெ.வி பெயர் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு வைக்கப்பட்டது நியாயமல்லவா!
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,