சாகித்திய அகாதமி விருது பெறும் பெண் எழுத்தாளர் அம்பை

 1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.


சி.எஸ். லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர், திரைப்பட இயக்குநர் விஷ்ணு மாத்தூரைத் திருமணம் செய்துகொண்டார்.
அம்பைஅம்பை
அம்பையின் இலக்கியச் செயல்பாடு, 1960-களில் அவருடைய பதின்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற நூலின் மூலம் எழுத்துலகில் நுழைந்த அம்பையின் முதல் தீவிர இலக்கிய ஆக்கம், 1966-ல் ‘அந்திமழை’ என்ற பெயரில் வெளிப்பட்டது. 1967-ல் ‘கணையாழி’ இதழில் வெளியான ‘சிறகுகள் முறியும்’ சிறுகதை அம்பையின் வருகையை அறிவித்தது. 1976-ல் இதே பெயரில், அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. 1988-ல் வெளியான அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘வீட்டில் மூலையில் சமையலறை’ தவிர்க்க முடியாத இடத்துக்கு அவரைக் கொண்டுசென்றது. தமிழின் முக்கியச் சிறுகதையாசிரியராக அம்பை உருவெடுத்தார். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியாக, தமிழ் நவீனப் பெண்ணிலக்கியத்தில் அம்பை உருவாக்கிய தடம் அழுத்தமானது.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,