எனக்கு பூகோளம் தெரியாது!
பூகோளம் தெரியாத பெருந்தலைவர் - அவையடக்கம்
ஒருமுறை பேசும்போது
திருநெல்வேலி தாமிரபரணி ஆறு எங்கு தோன்றுகிறது என்று எனக்குத் தெரியும்
அது எந்த எந்த ஊருக்குப் பாயுது என்று தெரியும்
அதில் எத்தனை அணை கட்டியிருக்கிறார்கள் என்று தெரியும்
அந்த அணை யார் கட்டியது எந்த வருடம் கட்டியது, எந்த பொறியாளர் கட்டியது என்று தெரியும்
எத்தனை குளங்களின் பாசனத்திற்கு போகுது என்று தெரியும்.
எத்தனை வாய்க்காலாகப் போகுது, அந்த நிலத்தில் என்ன பயிர் விளையுது தெரியும்
அதில் எத்தனை சின்னப் பாலம் பெரிய பாலம் என்று தெரியும்
ஆனால் என்ன எனக்கு பூகோளம் தெரியாது!!!!!!
என்று அவையடக்கத்துடன் பதில் சொன்னார் பெருந்தலைவர் .
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments