அவனுக்கு நீதான் 'எல்லாமே'

 



யாரோ ஒருவரின் அன்பை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதுதான் இவ்வாழ்வின் சாபமா என்றா கேட்கிறாய்?


இல்லை,

யாரோருவருக்கு அன்பை

சலிக்க சலிக்க 

திகட்ட திகட்ட 

தந்துகொண்டே இருப்பது தான் 

வாழ்வின் வரம்.


காதலிப்பதை விட

நேசிப்பதை விட

காதலிக்கப்படுவது 

நேசிக்கபடுவது போதை..

யாருக்கும் கிட்டாத திகட்டாத 

காற்றில் மிதக்கும் ஒரு வகை போதை..


எனக்குன்னு யார் இருக்கா என்பதற்கும் எனக்குன்னு அவன் இருக்கான் என்பதற்கும் இடைப்பட்டது தான் வாழ்வின் சூட்சுமம்.


தூக்கி வைத்து கொண்டாட யாரோ சிலர் தான் படைக்கப்பட்டுருக்கின்றனர்.

ஆசீர்வதிக்க பட்டுருக்கின்றனர்.‌

அதில் நீ ஒருத்தி என கொண்டாடு,

அதை விடுத்து 

எனக்கு இது நிலைக்குமா

நான் இதற்கு தகுதியானவளா என்று 

ஏன் பிதற்றுகிறாய்...

எதற்கு தவியாய் தவித்தோமோ 

எது வேண்டுமென தவமிருந்தமோ 

அது அப்படியே வேறு வடிவில் வந்து மடியில் தவழுகிறது..


அதையேன் மறுக்கிறாய்..


காதலிப்பதற்கு என்று தனிதகுதி எதுவுமில்லை இதுவரை,

அதற்கு தேவை ஒன்றே ஒன்று தான் 

ஆத்மார்த்தமான அன்பு..

அது டன் கணக்கில் கொட்டிகிடக்கிறது. 

உன்னை தலையில் தூக்கி வைத்து 

கொண்டாட ஒருவன் இருக்கும்போது

நீயேன் தரையில் உருண்டு பிரள்கிறாய்..

மனதையும் உன்னையும் அவனிடம் தந்துவிட்டு பேசாமல் படுத்துறங்கு,

அவன் பார்த்துக்கொள்வான்

அனைத்தையும்‌..


அவனுக்கு நீதான் 'எல்லாமே'


காதலுடன்

💜💜💜 #ஸ்ரீநி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,