திருலோக சீதாராம்.

 




அழுக்கற்ற அவரின் வாழ்க்கை நெறிதான் காமராஜரையும் அண்ணாவையும் ஒரே நேரத்தில் அவரை நேசிக்க வைத்தது. மனுதர்ம சாஸ்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்த அவர்தான் பெரியாரை அவர் நடத்திய எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேச அழைத்துள்ளார். அவர் அச்சகமும் வீடும் பல எழுத்தாளர்களின் பர்ணசாலையாக இருந்தன. வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி கரிச்சான்குஞ்சு, கு.ப.ரா, தி.ஜா, கி.வா.ஜ, எம்.வி.வெங்கட்ராம், அகிலன், ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, சுகி.சுப்பிரமணியம், வாலி என்ற அந்தப் பட்டியல் நீளும்.

1952 தேர்தலில் சுயேச்சையாக ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் திருலோகம் போட்டியிட்டார். இரண்டு ஜீப், மைக் எல்லாம் ஜி.டி.நாயுடு கொடுத்தார். செலவை என்.எஸ்.கிருஷ்ணன் பார்த்துக்கொண்டார். பாரதி பாடல்களை ஓங்கிப் பாடி உணர்ச்சியோடு பேசுவார் திருலோகம். அதுதான் பிரசாரம். பின்னால் வருகிற அவரின் நண்பர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஓட்டு கேட்பார். யாரையும் திட்டாத, வாக்குறுதி தராத ஒரு வேட்பாளரைச் சந்தித்த புது அனுபவம் திருச்சிக்கு.
ஜி.டி.நாயுடுவைச் சந்தித்து நண்பரானதே தனிக்கதை. நாயுடுவின் வீட்டைக் கடந்தபோது பார்க்க ஆசைப்பட்ட இவரிடம் ஒரு படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்யுங்கள். காரணம் சரியாக இருந்தால் மட்டுமே ஐயா பார்ப்பார் என்றார்கள். இவர் பார்க்கும் நோக்கம் என்ற இடத்தில் “சும்மா” என்று எழுதினார். நாயுடு திருலோகத்தை உடனே அழைத்தார். இப்படித் தொடங்கிய நட்பு அது. நல்லவர்கள் நட்பு என்பதால் வளர்ந்தது. “உழைப்பின் உயர்வு”, “அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு” என்று இரண்டு புத்தகங்கள் எழுதினார் திருலோகம். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றார் அந்த விந்தை மனிதர். எங்கள் திருச்சி சீத்தாலட்சுமி பள்ளிப் பெண்களுக்கு ஒரு பேருந்து கொடுங்கள் என்றார் திருலோக சீதாராம். மேதை தந்த பேருந்தை கவிதை வாங்கி வந்த அதிசயத்தைப் பள்ளி பார்த்தது. ஊரார் பிள்ளைகளை பஸ்ஸில் அனுப்பியதால் அவர் பிள்ளைகள் இன்று காரில் போகிறார்கள்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,