இரும்புக்குள் ஒரு சிங்கம் டத்தோ நோரா மனாஃப்

 🌟 டத்தோ நோரா மனாஃப் 🌟



அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரம்


கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, ஆசிய பசிபிக் மற்றும் ஆசியான் வணிகத் தலைவர் விருதுகளுக்காக 10 புகழ்பெற்ற தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பொதுத்துறை, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 10 முக்கியஸ்தர்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 


முன்னாள் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா ரோஹானி பிந்தி அப்துல் கரீம் விழாவைத் தொகுத்து வழங்கினார். மலேசியாவுக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் திருமதி பமீலா டன் அவர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். 

விருது பெற்ற 10 வணிகத் தலைவர்களில், ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் என்னுள் தொடர்ந்து உத்வேகத்தை விதைத்து வரும் அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரமான டத்தோ நோரா மனாஃப். 


மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய நிறுவனமும் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றான மேபேங்கின் குழுமத் தலைமை மனித மூலதன அதிகாரியாகச் செயல்படுகிறார் அவர். உலகெங்கிலும் உள்ள 46,000 ஊழியர்களைக் கண்காணிக்கும் 300 பேர் கொண்ட குழுவை அவர் வழிநடத்துகிறார். 

அவர் பட்டய கணக்காளராக தகுதி பெற்றவர். வங்கித் துறையில் நுழைவதற்கு முன்பு, அவர் ஓர் ஆசிரியராகவும், பின்னர் தொலைத்தொடர்பு உட்பட பல தொழில்களில் ஆலோசகராகவும் இருந்தார். வங்கி துறையில் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன், தொலைத்தொடர்பு தான் அவரது கடைசித் துறையாக இருந்தது. அவர் பணியாற்றிய முதல் வாங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டுடன் 9.5 வருடங்கள் தனது பயணத்தை மேற்கொண்டார். 


அவர் செப்டம்பர் 2008 இல் மேபேங்கில் சேர்ந்தார். அதன் பின்னர் டத்தோ நோரா மேபேங்கின் மனித மூலதன உத்தியை முதலாளிகளின் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பணியாளர்களின் நன்மைகள் மற்றும் திறமை பல்வகைப்படுத்தல்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலினம், இனம் மற்றும் தேசியம் மட்டுமின்றி, வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் - மேபாங்கில் ஒவ்வொரு விதத்திலும் பலதரப்பட்ட பணியாளர்கள் இருப்பதை அவர் உறுதி செய்தார்.


கரும்பு தோற்கிற இனிமையும்

இரும்பு தோற்கிற துணிவும்

எறும்பு தோற்கிற சுறுசுறுப்பும் கொண்ட இந்த இரும்பு பெண்மணிக்குள் உறுமிக்கொண்டே இருக்கிறது ஒரு சிங்கம். 

அவர் விரும்பாவிட்டாலும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டவர். அதுவே அவர் வாழ்க்கையின் தாரக மந்திரமாகவும் இருக்கிறது. 26 ஆண்டுகளுக்கும் மேலான திறமை, மேலாண்மை, அனுபவம் மற்றும் உலகளாவிய முதல் 50 மனித வள நிபுணராக அவர் அங்கீகாரம் பெற்றுள்ளதால், ஊழியர்களைக் கட்டியெழுப்பும் அறிவியலைப் பற்றிய அவரது நுண்ணறிவு பட்டயம் வங்கியாளர்களுக்குத் தொழிலின் தங்கத் தரத்தை உருவாக்குவதற்கு ஒரு தூண்டுதலாக உள்ளது. 


மேபாங்கில் உள்ள அனைவரும் அவரின் எளிமையான மற்றும் அடக்கமான அணுகுமுறையால் அவரை மிகவும் விரும்புகிறார்கள். அதனால் தான் எனக்கு மிகவும் பிடித்த...நான் அண்ணாந்து பார்க்கிற வணிகத் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். 


இவரை போன்ற திறமையான வணிகத் தலைவர்கள் இந்த நாடு போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். இவரின் நட்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பாக்கியசாலியாகவும் கருதுகிறேன். நல்ல உறவு பாங்கான விளை நிலம், அதில் அறுவடையாகும் வற்றாத புதையல் டத்தோ நோரா மனாஃப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள். 


மலேசிய வங்கித் துறையை மேம்படுத்துவதில் அவர் மேலும் மேலும் வண்ணமயமான பயணத்தை எதிர்கொள்ள வாழ்த்துகிறேன் 🙏


அவர் ஆளுமையை ரசித்து 

மலர்ந்த மலர்களில் நானும் ஒருவன், 


ராஜ் குமார் (மலேசியா)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,