பாரத ரத்னா -

 பாரத ரத்னா - இந்திய விருதுகளிலேயே மிக உயரிய விருது. அந்த விருது அன்னை தெரசாவுக்கு கொடுத்ததுல மிக முக்கியமா கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இருக்கு. பாரத ரத்னா விருதை அன்னைத் தெரசா வாங்குறதுக்கு முந்தைய வருஷஙகள்ல வாங்கின எல்லோருமே பிறப்பாலயே இந்தியர்கள்.


ஆனா, அன்னைத் தெரசா பிறப்பால இந்தியர் கிடையாது. மேலும், அவங்க எல்லோருமே ஏதோ ஒருவிதத்துல விடுதலை போராட்டத்துல பங்கெடுத்தவங்களா இருந்தாங்க. இல்லைனா இந்திய அரசுப் பணிகள்ல இருந்தாங்க. அறிவியலாளர்கள், பொறியாளர்கள் இப்படி ஏதாவது ஒரு பணியில இருந்தங்க. தோண்டு கேசவ் கார்வேங்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் மட்டும்தான் அந்த பட்டியல்ல சமூக சீர்திருத்தவாதி.
ஆனால், தொண்டுக்காக, சக மனிதரை எந்த பாகுபாடுமில்லாம அணைந்து வாரி வாஞ்சையாக சேர்ந்துக் கொண்டு தாயுள்ளத்துக்காகவே பாரத ரத்னா வழங்கப்பட்டது அன்னை தெரசாவுக்குதான். `அன்பின் பணியாளர்'னு சொல்லி விருது அன்னை தெரசாவுக்கு ஒரு நம் அரசு விருது வழங்குன நாள் வரலாற்றுல ரொம்பவே முக்கியமானது.
அன்னை தெரசாஅன்னை தெரசா
உலக வரைபடத்தில் நாடுகளுக்கிடையில் வரையபப்பட்ட எல்லைக் கோடுகளை எல்லாம் அன்பு கொண்டு துடைத்தெறிந்து, கண்ட மனிதரெல்லாம் நம் சொந்தமேனு அன்ளை, தொண்டை இந்த உலகுக்கு சொன்ன அன்னை தெசாவின் வாழ்வு பெருவாழ்வு. எளியவர்களுக்கு செய்யும் அரும்பணி இறைவனைத் தொழுவதைவிட மேலானது என்பர். தேவாலயங்களில், கோயில்களில், மசூதிகளில் என எந்த இறைவனை வேணட்டி பிரார்த்தித்தாலும் அந்த மனிதருக்கு தன் நேசக்கரம் நீட்டிய பண்பாளர் அன்னை தெரசா.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,