வான் சிறப்பு/உலகத் தண்ணீர் நாள்/ பிருந்தா சாரதி

 வான் சிறப்பு

*

பிருந்தா சாரதி

*

1

மழை எழுதுவதை

மனிதனால் 

எழுதமுடியாது.


2

மழை வரும்வரைதான்

உன் உறக்கம்

மண்ணே உறங்கு.


3

உறங்கும் விதை

முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் மழை.


4

பச்சை நிறக் கையெழுத்திடுகிறது

நிறமில்லா மையால் எழுதும் மழை.


5

நிறமற்ற நீர்  

மழை ஓவியத்தில் எத்தனை வண்ணங்கள் ?


6

மழைத் துளியில்

கருவானதுதான்

இந்த மாநிலம்.


7

பெண்மைதான் நீர்மையும்

எத்தனைப் பருவங்கள் ?

எத்தனை வடிவங்கள் ?


8

நீரில் எழுதிய எழுத்து நிலைக்காதா 

அழித்து அழித்து எழுதும் மழை.


9

வானம் பொய்த்துவிட்டதாம்

பொய் சொல்கிறார்கள்

மரம் வெட்டிகள்.


10

ஏதேதோ உலக இலக்கியமாம்

நீர் எழுதிய இலக்கியம்தான்

உலகமே.

*

('பச்சையம் என்பது பச்சை ரத்தம்' நூலில் இருந்து)


உலகத் தண்ணீர் நாள்


பிருந்தா சாரதி





Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்