`இனி ரயில்கள் நேருக்கு நேர் மோதாது!'
`இனி ரயில்கள் நேருக்கு நேர் மோதாது!' - இந்திய ரயில்வேயின் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி
விபத்தில்லா பயணம் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்த பல ஆண்டுகளாக சோதனையில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டதே இந்த கவச் (Kavach) என்ற தொழில்நுட்பம்.
இந்த ரயில்கள் எதிர் எதிரே வரும்போது தாமாகவே 380 மீட்டர் இடைவெளியிலேயே நின்றுவிட்டது. இந்தச் செயல்முறை சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறும் பட்சத்தில், சிவப்பு சிக்னலைத் ரயில் தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும். மேலும், இது ரயிலின் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும் இயங்க அனுமதிக்காது.
தற்போது இந்த கவச் தொழிநுட்பம் சோதனையில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி - மும்பை, டெல்லி கொல்கத்தா மார்க்கத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே துறை.
Comments