நானும் வெக்கமில்லாம வருஷா வருஷம் பாடிண்டிருக் கேன். நீயும் வெக்கமில்லாம வருஷா வருஷம் எழுதிண்டிருக்கே

 


ஒரு வித்வான் அன்றைக்கு என்ன பாடுகிறாரோ அதுதான் சுப்புடுவின் பிரதான விஷயமாக இருக்கும். பாடுகின்ற வித்வான் எப்படிப்பட்டவர், அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர், அவர் நன்றாகப் பாடியதைப் பற்றி நாம் ஏற்கெனவே பாராட்டி எழுதியிருக்கி றோமே என்றெல்லாம் பார்க்க மாட்டார். இந்த ஒரு குணாதிசயத்தினாலேயே அவர் பல எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தார். பல சமயங்களில் மிரட்டல்களும் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கின்றன. ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தரக் குறைவான விமர்சனத் துக்கும் ஆளானதுண்டு. கவலையே படமாட்டார், அதுதான் சுப்புடு.

ஒருமுறை பிரபல நடனமணியின் நடனத்தைப் பற்றி தினமணியில் இவர் எழுதிய விமர்சனம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தினமணியின் மேல் அந்த நடனமணி 50 லட்சரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றைத் தொடுத்தார். ஆனால், இந்த வழக்கு எடுபடாமல் போனது வேறு விஷயம்.
அவர் உருட்டிய தலைகளில் முக்கியமானது செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரின் தலை. ஒவ்வொரு கச்சேரியையும் கிழிப்பார். செம்மங்குடி முன்னால் யாரும் உட்காரக் கூடத் தயங்கிய காலம் அது. செம்மங்குடியே ஒரு முறை மிகவும் அலுப்புடன், 'நானும் வெக்கமில்லாம வருஷா வருஷம் பாடிண்டிருக் கேன். நீயும் வெக்கமில்லாம வருஷா வருஷம் எழுதிண்டிருக்கே' என்றாராம்.
- கேடிஸ்ரீ
நன்றி: தென்றல்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,