தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்

 




தாம் சினிமா துறையில் இருப்பதால் அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆவணப் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவணப்பட எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் பாராட்டினார் நடிகை ஷோபனா. முதலில் திமுக அரசு மீதும் தமக்கு நம்பிக்கையில்லாமல் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனால் எதிர்பாராத வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்து பேசச் சென்ற போது, அவரை என்ன சொல்லி அழைப்பது என தாம் குழம்பியதாகவும் அப்போது தன்னுடன் வந்தவர்கள் 'தலைவர்' என்றும் 'தளபதி' எனவும் அழைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். ஆனால் தாம் அவரை 'அண்ணா' என அழைத்ததாகவும் தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி