நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'

 



அருணாச்சலம்' படத்துல ரஜினிக்கு மாமியார் கேரக்டர்ல நடிச்சேன். அப்போ, `கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க'னு ஆச்சர்யமா கேட்டார். நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததுக்கு என் அம்மாவும் அப்பாவும்தான் காரணம். சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறுப்பா இருப்பேன். நான் வேகமா நடந்தா `வேகமா நடந்து கீழே விழுந்து மூக்கை உடைச்சிக்கிட்டீன்னா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'ன்னு கண்டிப்பாங்க. வேகமா படியிறங்கினா, `கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டினா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'னு திட்டுவாங்க. இந்தப் பேச்சை அடிக்கடி கேட்டுக் கேட்டு சலிப்பாகி ஒரு கட்டத்துல `என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வேணாம்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். இதைவிட முக்கியமான காரணம் எங்கப்பாவோட சந்தேக குணம். எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. நாம நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு எங்கப்பா, எங்கம்மாவை சந்தேகப்படுவார். `அப்பா மாதிரியே நமக்கும் ஹஸ்பண்ட் அமைஞ்சுட்டா என்ன பண்றது'ங்கிற பயத்துலேயே கல்யாணத்தை ஒத்திப்போட்டுட்டு வந்துட்டேன்'' என்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.

``என் அண்ணனுங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிச்சாங்க. அதுல நிறைய நஷ்டமாயிடுச்சு. அந்த நேரத்துல எம்.ஜி.ஆர் சார் கூட ஒரு படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு நாள் `நீ ஒரு படம் எடு. நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார் எம்.ஜி.ஆர். `உங்களை வைச்சு நான் படம் எடுக்கிறதா'ன்னு நான் ஆச்சர்யப்பட, `நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார் என்றும் கூறினார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,