தமிழுக்கு ஒரு குரல்


 தமிழுக்கு ஒரு குரல் இருக்கும் என்றால் அது சீர்காழியின் குரலைப் போல கணீர் என்று இருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை. சீர்காழி என்பது ஊரின் பெயர்தான். ஆனால் அந்தப் பெயரைக் கேட்டதும் முதலில் அது ஊர் என்று நம் நினைவுக்கு வருவதில்லை. அங்கு பிறந்து வளர்ந்து இசை பயின்று தன் காந்தக் குரலாலே தமிழ் உள்ளங்களையெல்லாம் கட்டிப் போட்ட சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முகமே நம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன் இசையால் தமிழகத்தை ஆண்ட ஆள்கின்ற ஆளப்போகிற இசைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் கோவிந்தராஜன்.

சீர்காழி தமிழிசையின் மையம். தமிழிசை மூவர்கள் என்று போற்றப்படும் அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரையும் சீர்காழி மூவர் என்று போற்றுகிற வழக்கம் உண்டு. இந்த மூவருமே சீர்காழியில் வாழ்ந்தவர்கள். கர்னாடக இசைக்கு நிகரான தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றித் தமிழிசையை மேம்படுத்தியவர்கள். அப்படிப்பட்ட இசை வளம் செறிந்த பூமியிலிருந்து கோவிந்தராஜன் மற்றுமொரு வரமாகத் தமிழிசைக்குக் கிடைத்தார்.
நன்றி: விகடன்

சீர்காழி கோவிந்தராஜன் நினைவுநாள் இன்று
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,