தமிழ் திரையுலகில் தன் நடிப்பு முத்திரை பதித்த “சிங்கப்பூர் நடிகர் மதியழகன்”

 

 தமிழ் திரையுலகில் தன் நடிப்பு முத்திரை பதித்தசிங்கப்பூர் நடிகர் மதியழகன்” 

 

 

இந்த உலகில் தமிழர்களின் கால் படாத இடம் என்று ஒன்று உலகில் எங்கும் இல்லை.

நம் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வசித்து வருகின்றனர், சிங்கப்பூர் தமிழர்கள் என்றாலே ஒரு மினி தமிழ்நாட்டு மக்களே என சொல்லலாம்.

 சிங்கப்பூர், தமிழர்களுக்கு இரண்டாம் தாய் வீடு சிங்கப்பூர் என்பது உண்மையாகும்.

பிறந்தது தமிழ்நாட்டில்

வளர்ந்தது  சிங்கப்பூர் .

இவர் மதி என அன்பாக அழைக்கப்படும்

உலகத்தை  கவர்ந்துள்ள  நடிகரான மதியழகன் அவர்களை ப்பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் இது.

தமிழகத்தின் தஞ்சை தரணியில் பட்டுக்கோட்டையில் பிறந்த இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர்.

12 வயதில் அங்கே மேடை.

 35வது வயதில்  சினிமாவில் நடிக்க வாய்ப்பு

இவரின்  முதல் கேமரா அனுபவம். அஜித்தின்பூவெல்லாம் உன் வாசம்படத்தில் தான்.

அன்று துவங்கியது இவரின்  தமிழ் சினிமா பயணம் .

 சுமார் 20 ஆண்டுகளாக சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்

தற்போது ஒரு மகுடம் பென்குயின்” .

இவர்  ஆசிய அளவிலும் ஒரு விருதினை பெற்றுள்ளார்.

தமிழ் மக்களிடம்  முதல் முறை..

அவரின்  மட்டில்லா மகிழ்ச்சி நமக்கும்தான்

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான Edison விருதினை பெற்றதைதான் சொல்கிறோம்.

 2020ம் ஆண்டு ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான பென்குயின் என்ற படத்தில் ஒரு நெகடிவ் ரோல் ஏற்று நடித்தபோது நான் இவரைப்பற்றி பீப்பிள் டுடே வில் யார் இவர் இந்த  மதி அசத்தலான நடிப்பு என எழுத பல நண்பர்கள் அந்த படத்தைப்பார்த்து என்னை ஆமோதித்தனர்

நம்மை மெய்சிலிர்க்க வைத்த இவருக்கு அந்தபடத்திற்காக  Best Character Artist Overseas என்ற எடிசன் விருதை பெற்றுள்ளார்

இந்த பதிவின் நாயகன் மதியழகன்.

 சிங்கப்பூரிலும் சரி தமிழகத்திலும் சரி, ஏன் உலக அரங்கிலும் இவருக்கு அறிமுகம் தேவையில்லை


காரணம் . “தாயுமானவன்என்ற ஒற்றை வார்த்தை இவர் வரலாற்றை சொல்லும் விஜய் தொலைக்காட்சி தொடரின் பாத்திரம்

மற்றும் காக்கி என்ற என்ற தொலைக்காட்சி  தொடரும்,

 

இவர் கடந்து வந்த பாதை,

சிறு வயதில் நாடங்களில் அசத்தல்,

இதனால் இவரின் அடுத்தகட்ட பயணம் இதற்கு  காரணமாக இருந்தது சிங்கப்பூர் கலைஞர் சங்கம்,

. அதன் பிறகு இந்திய கலைஞர் சங்கம் வழியாக வானொலி நாடகத்திற்கு செல்ல வாய்ப்பு,

மர்மமேடை உள்ளிட்ட பல நாடகங்களில் நடிப்பு,

 நடிப்பில் ஜொலிக்க துவங்கிய இவருக்கு விருதுகள் வந்து குவிப்பு,

1999, 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் பிரதான விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள்,

 2006ம் ஆண்டு ஆசியாவிலேயே சிறந்த நடிகர் என்ற விருது.,

 

 35வது வயதில் தமிழ் சினிமாவில் களம்,

 2000ம் ஆண்டில் அஜித் அவர்களின் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலமாக,

 அதன் பிறகு சிங்கையில் குருஷேத்ரம், பறந்து செல்லவா, ஜிப்பா ஜிமிக்கி,  காஞ்சனா 2 தமிழ்நாட்டில்  மற்றும் Monkey Man என்ற ஹாலிவுட் படத்திலும் என  நடிப்பு முகங்கள்,

 

நடிப்பு ஒருபுறம் இருக்க, நம் தமிழர்களுக்கு உதவேண்டும் என்று உறுதியில் இவர்  துவங்கியது தான் ARPANA (அர்பணா) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். ,

கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிறுவனம் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார் மதியழகன்.

சிங்கப்பூரில் நடைபெறும்பிரதான விழாவில்வழங்கப்படுகின்ற சிறந்த நடிகருக்கான விருதினை பலமுறை பெற்ற இவர்  . தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்

 தன் நடிப்பை பல குணசித்திர பாத்திரங்களில் காண்பித்து வரும் இவருக்கு பீப்பிள் டுடே      இதழின் பாராட்டுதல்கள்

--எழில் நிலவன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,