அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC)குறித்து பயிற்சி

 




சென்னை,OXFAM INDIA நிறுவனத்தின் சார்பாக  அடையார் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஏழு கிணறு அரசினர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி அரசினர் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில்   பள்ளி மேலாண்மை குழு (SMC)குறித்து பயிற்சி நடத்தப்பட்டது

. இந்த பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு செயல்படுத்த வேண்டும் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் துணைத் தலைவர் யாராக இருக்க வேண்டும் என்பதையும் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் பணி  என்ன என்பதையும் இந்த பயிற்சி வகுப்பில் திரு. அல்லாபகேஷ் அவர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார் இந்த பயிற்சியில் பள்ளியில் உள்ள 35க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் கலந்து கொண்டார்

இப்பயிற்சி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் வருகின்ற ஞாயிறு அன்று நடைபெற இருக்கின்ற பள்ளி மேலாண்மை குழு (SMC) கூட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இப்பயிற்சியில் கலந்துக்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு (SMC) கையேடு கொடுக்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்