தேங்காய் பராத்தாவும் கிரீன்பீஸ் மசாலாவும்

 


தேங்காய் பராத்தாவும் கிரீன்பீஸ் மசாலாவும் 



தேங்காய் பராத்தா செய்முறை

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - 2 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித் தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

புதினா இலைகள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை

ஸ்டெப் 1

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்

ஸ்டெப் 2

பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லிதழையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்கி தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு தட்டில் மாற்றிக் ஆறவைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

இப்போது பிசைந்த மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்துக் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய வட்டங்களாக சிறிது மாவு தூவி தேய்த்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் கலவையை நடுவில் வைத்து பக்கவாட்டில் இருக்கும் மாவை மடித்து கூம்பமாக சேர்த்து மீண்டும் அழுத்தி சிறிது மாவு தூவி வட்டமாக தேய்க்கவும்.

ஸ்டெப் 4

ஸ்டஃபிங் நிரப்பிய பராத்தாகளை எப்போதும் போல சூடான தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி பொன்னிறமாக ‌‌‌ சுட்டு எடுத்து கொள்ளவும்.

நீங்களும் இதே செய்முறையில் ருசியான ஸ்டஃப்டு தேங்காய் பராத்தாவை இப்பவே ட்ரை பண்ணுங்க!


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,