கிரய ஆவணம் எழுதி பதியும் போது மாதிரிகளை (TEMPLATE) பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் !

 கிரய ஆவணம் எழுதி பதியும் போது மாதிரிகளை (TEMPLATE) பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் !



1. பல லட்சம் அல்லது பல கோடி செலவு செய்து தேடி பிடித்து சொத்துக்களை வாங்குவார்கள், அப்படி வாங்கும் சொத்துக்களை பத்திரம் எழுதும் போது ஆவண எழுத்தர்கள் மூலம் மாதிரிகளை வைத்து பத்திரங்களை எழுதுகின்றனர் ,மாதிரிகள் என்றால் ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு பத்திரம் செய்தபோது டைப் செய்ததை ஒரு Formate ஆக வைத்து அதிலேயே புதிய ஆவணத்தை உருவாக்குவது ஆகும்.


இந்த நடைமுறை மிகவும் தவறானது,கொஞ்சம் கூட செலவானாலும் சரி நல்ல வழக்கறிஞர் அல்லது நல்ல ஆவண எழுத்தரை வைத்து மாதிரி இல்லாமல் உங்களுக்கு என்று பிரத்தியோகமாக ஆவணம் தயார் செய்வதே நல்லது.மேலும் முன்கூட்டியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதிக நேரம் கொடுத்து வழக்கறிஞர்/ஆவண எழுத்தர் களுக்கு கொடுத்து டிராப்ட் போட்டு கொடுக்க சொல்ல வேண்டும்.


3. பெரும்பாலும் சொத்து வாங்குபவர்கள் நல்ல நேரம் முடிய போகுது ,நல்ல நாள் முடிய போகுது என்று தங்களுக்கு உள்ளேயே ஒரு Beliefs System த்தை உருவாக்கி கொண்டு பதட்டபட்டு கொண்டு இருப்பார்கள்.அல்லது அவர்களுடைய உறவினர்கள்,ரியல் எஸ்டேட் ஏஜேண்டுகள்,இடத்தை விற்பவர்கள் இந்த நல்ல நேரம் நம்பிக்கையை பத்திரபதிவு அன்று சொல்லி அவசரபடுத்தி கொண்டு இருப்பார்கள். இப்படி அவசரபடுத்தாமல் அங்கு இருக்கும் சூழ்நிலையிலேயே FLOW லேயே பயணித்து மன அமைதியுடன் டிராப்ட் போடும் வேலையை பார்த்தால் உங்கள் கிரய பத்திரம் மிக சிறப்பாக அமையும்.


4.அவசர மனநிலையிலும் நேர நெருக்குதலிலுமே தான் நிறைய பேர் டிராப்ட் போடுகிறார்கள்.சில ஆவண எழுத்தர்கள் கடமைக்கு ஏற்கனவே இருக்கும் மாதிரியை வைத்து பத்திரம் போடுகிறார்கள்.இப்படி செய்வதால் பத்திரங்களில் அதிக பிழைகள் தவறுகள் வருகிறது.


5.தந்தைக்கு பூர்விக சொத்து , பட்டா அவர் பெயரில் இறங்கி இருக்கிறது. எந்தவித உயில் ஏற்பாடுகள் செய்யாமல் இறந்து விட்டார் . அவருக்கு ஒரு மனைவி, நான்கு பெண்கள், ஒரு ஆண் வாரிசு் , எல்லாரும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியில வசிக்கிறார்கள். ஆண் வாரிசு மகன் வாரிசு வெளிநாட்டில் இருக்கிறார் .6.ஒரு விடுமுறையில் அனைவரும் வேக வேகமாக பத்திரபதிவு அலுவலகம் வருகிறார்கள் . சொத்தை 5 பாகமாக பிரிக்க வேண்டும் என சொல்லி , சொத்தை நீள அகலத்துடன் சார்பதிவகத்தில் இருக்கிற ஆவண எழுத்தரை பார்க்கிறார்கள் , ஆவண எழுத்தர் செட்டில்மென்ட் பத்திர டிராப்ட்டை கணினியில் இருந்து எடுத்து டிராப்ட் தயார் செய்து பத்திரம் பதிவு செய்து கொடுக்கிறார்.அதாவது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உண்டான பாகத்தை தனி தனியாக செட்டில்மென்ட் பத்திரம் எழுதி பதிந்து கொடுக்கிறார். .சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு செய்யபடுகிறது.பிறகு வேகவேகமாக அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்


7. சில மாதங்கள் கழித்து மேற்படி பத்திரங்கள் பட்டா பெயர் மாற்றத்திற்கு செல்லும் போது தான் அவர்களுக்கு மேற்படி பத்திரமே தவறு என்று தெரிய வருகிறது. ஆம் ! தந்தையின் பூர்விக சொத்து அவரின் மனைவி உட்பட 6 பேருக்கும் வாரிசுரிமை படி நேரிடையாக இறங்கி விடுகிறது. மேற்படி சொத்தில ஒரு நபருக்கு் 1/6 பங்கு வருகிறது.


8.மேற்படி தாயாருக்கு மற்ற வாரிசுகளை போல ஆறில் ஒரு பங்குதான் வருகிறது. ஆனால் சொத்து முழுதும் அவருடையது போல் அனைவருக்கும் 5 பங்காக பிரித்து எழுதி கொடுத்து விட்டார்.அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை .


9. தப்பான பத்திரம் திருத்தி வர சொல்லி விட்டார்கள்.பத்திரம் சட்ட குழப்பங்களுக்கு உள்ளாகி விட்டது. இதோடு எப்படி மீண்டும் எல்லாரும் ஒரே நாளில் கூடி ஊருக்கு வந்து பழைய பத்திரங்களை இரத்து செய்துவிட்டு புதிய பத்திரங்களை போடுவது என்றும் போக்குவரத்து அலைச்சல் செலவுகளை நினைத்து மலங்க மலங்க விழித்து கொண்டு இருக்கின்றனர்.


10. சென்னை வடபழனியில் ஒரு சொத்து கிரயம் , மேற்படி சொத்துக்கு மெயின் ரோட்டில் இருந்து 3 அடி தனி வழி , அது அவர்களுக்கு மட்டுமே ஆன வழி . அந்த வழியுடன் சேர்த்து தான் மொத்த விஸ்தீரணம் , மேற்படி வழியை ஒட்டி இரண்டு வெவ்வேறு சொத்துக்கள் இருக்கிறது. கிரய சொத்திற்கு நான்கு எல்லைகள் பத்திரத்தில் நான்குமாலில் சொல்லும் போது ஒரு எல்லையில் இந்த 3 அடி வழியும் சொத்துக்குள் வருவதால் 3 அடி வழி தொடுகின்ற மெயின் ரோடும் , வழியை ஒட்டி இருக்கிற இருபக்கத்தில் இருக்கிற வீட்டு உரிமையாளர் பெயரும் காட்ட வேண்டும்.


11. மாதிரி பார்த்து பத்திரம் அடித்ததில் வழியை ஒட்டி இருக்கும் இரண்டு பக்கத்தில் இருக்கிற வீடுகளை மட்டும் காட்டினார்கள்.அந்த 3 அடி வழியையும் காட்டினார்கள்.ஆனால் 3அடி வழி அது தொட்டு கொண்டு இருக்கும் சாலை எல்லையை காட்ட வில்லை. பத்திரம் பதிந்து விட்டார்கள் மேற்படி சொத்து கட்டிட அனுமதிக்கு போகும் போது வரைபடம ரோடோடு இணைகிறது், பத்திரம் ரோடோடு ஒட்டவில்லை என திரும்ப அனுப்பி விட்டார்கள் . மீண்டும் சொத்து விற்றவர்களை தேடு தேடு என்று அவை சரி செய்யப்பட்டது.


#கிரையம் #கிரயம்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,